திருப்பலி முன்னுரை
இறையன்பில் பிரியமுள்ள என் இறைமக்களே! இன்றைய புதிய நாளிலே, புதிய எண்ணங்களோடும், புதிய சிந்தனைகளோடும், புதிய உறவுகளாய் இறை அருள் வேண்டி நிற்கும் என் உறவுகளே! இன்று திருவருகைக் காலம் நான்காவது வாரத்திற்குள்ளே நுழைகின்றோம்.
முதலாவது இறைவார்த்தையிலே, 'நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்' என்று ஆண்டவர் தாவீதுக்கு கொடுத்த வார்த்தைகள் நம்பிக்கையை அளிக்கின்றது. கடவுளின் அரியணை எப்படி இருக்கும் என்பதற்கு இவ்வார்த்தைகள் தெளிவைக் கொடுக்கின்றன. இந்த நம்பிக்கை தான் லூக்கா நற்செய்தியாளர் பிறக்க இருக்கும் இறைமகன் ஒரு மெசியாவாக, இம்மானுவேலனாக, அதாவது கடவுள் நம்மோடு இருக்கிறார் எனும் மறை பொருளை அழகான முறையில் வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் வாழ்வும் பணியும் எப்படி அமையப்போகின்றது என்பதனையும் அவர் யார் என்பதன் அடயாளத்தையும் எமக்கு எண்பிக்கின்றார். நற்செய்தியாகிய கிறிஸ்துவைக் கேட்டு நம்பிக்கை கொள்ள புனித பவுலும் எம்மை அழைக்கின்றார்.
கடவுள் வரலாற்று நிகழ்வுகளில் மட்டும் இடம்பெற்றவர் அல்ல. மாறாக, தனது மகனை இவ்வுலகிற்கு அனுப்பும் அளவிற்கு இவ்வுலகின் மேல் அன்பு கொண்டவர். ஆதிப்பெற்றொரின் பாவத்தினால் இவ்வுலகை அழிக்க சித்தம் கொள்ளவில்லை. மாறாக கிறிஸ்துவினூடாக தன்னை அறியவும், அன்பு செய்யவும் திட்டம் கொண்டார். இன்றைய வாசகங்கள் இவற்றை நிறுபிக்கவே எமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவேஎ, கிறிஸ்துவின் பிறப்பை எதிர்கொள்ள, முழுமையாக அனுபவிக்க, நம்பிக்கையோடு செயற்பட, எம்மை தொடரும் இப்பலியோடு இணைத்துக்கொள்வோம்.
முதல் இறைவாக்கு
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8டி-12, 14-16 : தாவீதின் அரசு ஆண்டவர் முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27 : ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நற்செய்தி இறைவாக்கு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38 :இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்
விசுவாசிகள் மன்றாட்டு
குரு: இம்மானுவேலனாக பிறக்க இருக்கும் எமது இயேசு, எம்மை மீட்கவும், எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவும் பேரொளியாக துளங்கும் அவரிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. அன்பின் ஆண்டவரே! உமது திருமகனின் பிறப்பிற்காக உமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஆயத்தம் செய்யவென உழைக்கும் ஒவ்வொரு திருநிலைப்பணியாளர்களும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் அன்பு சீடர்களாக மாறிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இறைவா! உமது வருகைக்காக எம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் நாம், உம்மை அறிந்து அறிவிக்கவும், நீர் எம்மை மீட்கவே வந்துள்ளீர் என்று ஏற்றுக்கொண்டு வாழவும் பிறரை வாழ்விக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. இறைவா! இவ்வுலகின் ஏழைகள் வறியவர்கள், துன்பப்படுவோர், அநாதைகள், வைத்தியசாலையில், சிறச்சாலையில் தவிப்போர் அனைவருக்கும் உமது பிறப்பின் செய்தி நம்பிக்கையையும், மன மகிழ்வையும், கொண்டுவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஆண்டவரே! நீர் படைத்த இந்த அழகான உலகிலே, வரட்சியும், வறுமையும் கொடுமைகளும், துன்பங்களும், கொலைகளும், வன்முறைகளும் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும், நீர் பிறக்கும் போது இவற்றினால் துயருறும் மக்களை கைவிட்டுவிடாமல் உமது பரிவிரக்கத்தினாலும், அன்பாலும் அவர்களை மீட்டருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. ஆண்டவரே! ஏமது பங்கு மக்களின் வாழிவிலே நீர் கொண்டுவரும் அமைதியும், மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைவாய் தங்கிடவும், தாங்கள் நடந்துவந்த பாதையில்; ஏற்பட்ட தவறுகளை மன்னித்து, புதிய உலகம் படைக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பின் இறைவா! ஆவலுடன் எதிர்பார்க்கும் உமது பறப்பிற்காக எம்மை தயார்ப்படுத்தியருளும். இருளின் மத்தியில் ஒளியாகவும், தடைகளின் மத்தியில் பாதையாகவும், துயரங்கள் மத்தியில் ஆறுதலாகவும் இருக்கச் செய்தருளும். உம்மை கண்டு வாழ்வதில் மகிழ்ச்சிகொண்டு பிறரையும் உமது கருவியாக மாற்ரியருளும். நாம் ஒப்புக்கொடுக்கும் மன்றாட்டுக்கள் உமதண்டை வந்து சேர்வதாக. என்றேன்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment