புனித இரவில் பாஸ்கா திருவிழிப்பு
முன்னுரை:
இன்று நாம் கொண்டாட இருக்கும் இவ்விரவு ஒரு புனித இரவு. இருள் ஏனும் சாவை இயேசு வெற்றிகொண்ட இரவு, பாவத்தை தகர்த்தெறிந்த இரவு. இவ்விரவை நாம் கொண்டாடவேண்டும். எமக்கு நம்பிக்கை எனும் வெளிச்சத்தை தந்த இரவு, இதுவே பாஸ்கா இரவு ஆகும். எகிப்தியரின் உலகிற்குள் அடிமைப்படுத்தப்பட்டிருந்த இஸ்ராயேல் மக்களை ஒரு சுதந்திர மக்களாக கொணர்ந்த இரவு, முழு மனித விடுதலையை பெற்று இறைவனின் சுவிகார மக்களாக மாற்றிய இரவு, சுதந்திரமாக வழிபடவென அழைத்துச்சென்ற இவ்விரவே பாஸ்கா இரவு ஆகும். இயேசுவின் உயிர்ப்பு நாளில் அகமகிழும் திரு அவை மக்களாகிய நாம் எமை சூழ்ந்திருக்கும் பாவ இருளை அகற்றி கிறிஸ்துவே ஒளியாக இவ்வுலகிற்கு கொண்டு வருவோம்.
இன்றைய வழிபாடு நான்கு பெரும் பிரிவுகளை கொண்டிருக்கின்றது.
1. ஒளியின் வழிபாடு
2. இறைவார்த்தை வழிபாடு
3. திருமுழுக்கு வழிபாடு
4. நற்கருணை வழிபாடு
முதல் பகுதி: திரு ஒளி வழிபாடும் பாஸ்கா புகழுரையும்;
இரண்டாம் பகுதி: வார்ததை வழிபாடு - ஆண்டவராகிய கடவுள் தொடக்கத்திலிருந்தே தம் மக்களுக்குப் புரிந்துள்ள அரும்பெரும் செயல்களைப் புனிதத் திரு அவை சிந்தித்து, அவரது வார்த்தையிலும் வாக்குறுதிகளிலும் நம்பிக்கை கொள்ள முனைகின்றது.
மூன்றாம் பகுதி: திருமுழுக்கு வழிபாடு. விடியல் நெருங்கி வர, திரு அவையின் புது உறுப்பினர் திருமுழுக்கினால் புதுப் பிறப்பு அடைவர்;
நான்காம் பகுதி: நற்கருணை வழிபாடு. ஆண்டவர் தம் இறப்பினாலும் உயிர்பினாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்தில், அவர் மீண்டும் வரும்வரை பங்குகொள்ளத் திரு அவை அழைக்கப்படுகின்றது.
பாஸ்கா திருவிழிப்பு முழுவதும் இரவிலேயே கொண்டாடப்பட வேண்டும்; எனவே அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது. ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும்.
திருவிழிப்புத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும், அது ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு திருப்பலி ஆகும்.
இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், பகலில் நடைபெறும் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய அருள்பணியாளர் பகலில் தனியாகவோ கூட்டாகவோ இரண்டாவது திருப்பலி நிறைவேற்றலாம். பாஸ்கா திருவிழிப்புக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வாசகத் திருப்புகழ்மாலையில் பங்குபெறுவதில்லை.
அருள் பணியாளரும் திருத்தொண்டரும் திருப்பலிக்கான வெண்ணிறத திருவுடைகளை அணிவர்.
திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வகை செய்ய வேண்டும். கோவிலில் உள்ள விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கும்.
முதல் பகுதி திருவிழிப்பின் சிறப்புத் தொடக்கம் அல்லது திரு ஒளி வழிபாடு
தீயையும் பாஸ்கா திரியையும் புனிதப்படுத்துதல்
1. ஒளியின் வழிபாடு
இப்பொழுது ஒளியின் வழிபாடு ஆரம்பமாகின்றது. கடவுள் இவ்வுலகைப் படைத்தபோது, ஒளியை தனது முதற்படைப்பாக படைத்தார். ஒளி இருக்கும் இடத்தில் இருள் ஆட்சிசெலுத்த முடியாது. இன்று இவ்வொளி புது ஒளியாக ஏற்றப்படுகின்றது. தேனிக்களின் முயற்சியினால் ஆன மெழுகுதிரியைக் கொண்டு இவ்வொளி ஏற்றப்படுகின்றது. இதுவே தாய்த் திரியாக உலகிற்கு ஒளியாக திகழும் இயேசுவை எண்பிக்கின்றது. கடவுள் இஸ்ராயேல் மக்களை ஒளியிலும், மேகத் தூணிலும் நடத்திச் சென்றார். இயேசுவின் உயிர்ப்பின் ஒளி இன்று எம்மை அழைத்துச் செல்கின்றது.
இதோ ஒளியின் பவனி ஆரம்பமாகின்றது. குருவானவர் பாஸ்கா மெழுகுதிரியை ஏந்திச் செல்வார். 'கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று அழைக்க, நாம் 'இறைவனுக்கு நன்றி' என்று பதிலுரைப்போம், அவரை பின் தொடர்ந்து ஒரே நுழைவாயிலின் வழியே ஆலயம் செல்லுவோம்.
பாஸ்கா புகழுரை
திருத்தொண்டர் திருப்பலி நூலுக்கும் பாஸ்கா திரிக்கும் தூபம் இட்டு, வாசக மேடையில் நின்றுகொண்டு பாஸ்கா புகழுரையைப் பாடுகின்றார்; அப்பொழுது அனைவரும் எரியும் திரிகளைத் தம் கைகளில் ஏந்தி நிற்பர்.
இரண்டாம் பகுதி
இறைவார்த்தை வழிபாடு
திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக மொத்தம் ஒன்பது வாசகங்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நேரம் நிகழும் திருவிழிப்பின் தன்மையை வெளிப்படுத்தும் வண்ணம், இயன்றவரை வாசகங்கள் அனைத்தும் வாசிக்கப்பட வேண்டும்.
முன்னுரை
கடவுளின் திட்டம் என்பது அவரது படைப்பின் தொடக்கம் முதல் இன்றுவரை நிறைவேறிக்கொண்டே இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு இவற்றை செவ்வனே தெளிவுபடுத்துகின்றன. மனிதனின் பாவத்தின் விளைவாக கடவுள் எமை மீட்க திட்டம் கொண்டார். இத்திட்டம் தனது மகன் இயேசுக் கிறிஸ்து வழியாக நிறைவேறுகின்றது. இதனையே ஒவ்வொரு இறைவார்த்தையும் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, அனைவரும் வாசிக்கப்படும் இறைவார்த்தைகளுக்கு பக்தியுடன் செவிமெடுப்போம்.
முதலாம் இறைவாக்கு: கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1 - 2: 2
பதிலுரைப் பாடல் திபா 104: 1-2ய. 5-6. 10,12. 13-14. 24,35உ (பல்லவி: 30)
பல்லவி: ஆண்டவரே! உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
அல்லது
திபா 33: 4-5. 6-7. 12-13. 20,22 (பல்லவி: 5டி)
பல்லவி: ஆண்டவருடைய பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
செபம் இடம்பெறும்
இரண்டாம் இறைவாக்கு: நம் தந்தை ஆபிரகாமின் பலி. தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-18
பதிலுரைப் பாடல் திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
செபம் இடம்பெறும்
மூன்றாம் இறைவாக்கு: இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 15 - 15:1
பதிலுரைப் பாடல் விப 15: 1-2. 3-4. 5-6. 17-18 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில் மாட்சியுடன் வெற்றி பெற்றார்.
செபம் இடம்பெறும்
நான்காம் இறைவாக்கு: என்றுமுள்ள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 54: 5-14
பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10,11ய,12டி (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைதூக்கிவிட்டீர்.
செபம் இடம்பெறும்
ஐந்தாம் இறைவாக்கு: என்னிடம் வாருங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11
பதிலுரைப் பாடல் எசா 12: 2-3. 4டி9உன. 5-6 (பல்லவி: 3)
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள்.
செபம் இடம்பெறும்
ஆறாம் இறைவாக்கு: ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32-4: 4
பதிலுரைப் பாடல் திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)
பல்லவி: ஆண்டவரே! நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
செபம் இடம்பெறும்
ஏழாம் இறைவாக்கு: நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17ய, 18-28
பதிலுரைப் பாடல் திபா 42: 2,4யடிஉ; 43: 3. 4 (பல்லவி: 42: 1)
பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
இத்திருவிழிப்பின்போது திருமுழுக்கு நடைபெறுமானால், ஐந்தாம் வாசகத்துக்குப் பின்னர் வரும் பதிலுரைப் பாடலைப் பயன்படுத்தவும். (காண்க: பக்கம் 432). அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள திருப்பாடல் 51ஐப் பயன்படுத்தவும்.
திபா 51: 10-11. 12-13. 16-17 (பல்லவி: 10)
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
செபம் இடம்பெறும்
முன்னுரை
இப்பொழுது வானவர் கீதம் பாடப்படும், ஆலய மணிகள் ஒலிக்கப்படும், பீடத்தின் மீது காணப்படும் விளக்குகள் ஒளி ஏற்றப்படும். பாவத்தை வென்று, இயேசு வெற்றி வீரனாக உயிர்த்தார் என்பதன் அளவற்ற மகிழ்ச்சியை நாமும் பகிர்ந்துகொள்வோம். உலகிற்கு ஒளியாக வந்த கிறிஸ்து எமது இதயங்களில் ஒளிர்வாராக.
வானவர் கீதம் இடம்பெறும்
மணிகள் ஒலிக்கும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, புனிதமிக்க இந்த இரவை ஆண்டவருடைய உயிர்ப்பின் மாட்சியால் ஒளிர்விக்கின்றீர்;. உமது திரு அவையில் அனைவரும் உம் சொந்த மக்கள் எனும் மனப்பாங்கைத் தூண்டி எழுப்பியருளும்: அதனால் நாங்கள் உடலிலும் மனதிலும் புதுப்பிக்கப்பெற்று உமக்குத் தூய்மையான ஊழியம் புரிவோமாக. உம்மோடு.
எட்டாம் இறைவாக்கு: திருமுகம்
இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 3-11
பதிலுரைப் பாடல் திபா 118: 1-2. 16யடி-17. 22-23
பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது;
ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;
ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். -பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி
நற்செய்தி இறைவாக்கு: சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-7
அருள்பணியாளர் வழக்கம் போலத் தூபக் கலத்தில் சாம்பிராணி இடுகின்றார்.
மூன்றாம் பகுதி
திருமுழுக்கு வழிபாடு
திருமுழுக்குத் தொட்டி அல்லது திருமுழுக்கு இடம் நோக்கிய பவனி பின்வருமாறு நடைபெறும். பணியாளர் ஒருவர் பாஸ்கா திரியுடன் முன் செல்ல, திருமுழுக்குப் பெறுபவரும் அவர்களுடைய ஞானப் பெற்றோரும் பிற பணியாளர்களும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்கின்றனர். பவனியின்போது புனிதர் மன்றாட்டுமாலை பாடப்படும். மன்றாட்டுமாலை முடிவில் அருள்பணியாளர் அறிவுரை கூறுகின்றார்.
திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போக வேண்டுமானால், பவனியின் போது மன்றாட்டுமாலை பாடப்படும்; அப்படியானால், திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்கும் முன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்கா திரி கொண்டு போகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானப் பெற்றோருடன் செல்ல, பணியாளரும் திருத்தொண்டரும் அருள்பணியாளரும் பின்தொடர்வர். நீரைப் புனிதப் படுத்தும் முன் அறிவுரை வழங்கப்படும்.
திருமுழுக்குப் பெறுவோர் இல்லையென்றாலோ திருமுழுக்குத் தொட்டி புனிதப் படுத்தல் இல்லையென்றாலோ, மன்றாட்டுமாலையை விட்டுவிட்டு உடனே தண்ணா புனிதப்படுத்தப்படும்
புனிதர் சிலரின் பெயர்களை, சிறப்பாகக் கோவிலின் பாதுகாவலர், ஒரு தலத்தின் பாதுகாவலர், திருமுழுக்குப் பெறுவோரின் பெயர் கொண்ட புனிதர் ஆகியோர் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக் கொள்ளலாம்.
முன்னுரை
இப்பொழுது திருமுழுக்கு வாழிபாடு ஆரம்பமாகின்றது. திருமுழுக்கு பெறும் புகுமுக நிலையினருக்காக மன்றாடும் அதேவேளை, திருமுழுக்கு பெற்ற நாமும் அதன் வாக்குறுதிகளை புதுப்பித்து இறைவனிலே புதிய உறவை மேம்படுத்துவோம். தண்ணீரின் வழியாக புதுப்பிறப்படைந்து, தூய ஆவியினால் புதுவாழ்வு பெற்றவர்களாய் அவரிலே ஒன்றித்து வாழ்வோம். நாம் அவர் பிள்ளைகள் என்பதே எமது மகிழ்ச்சி. இம்மகிழ்ச்சியை நாம் இரட்டிப்பாக்குவோம். பக்தியோடு இவ்வழிபாட்டிலே கலந்துகொள்வோம்.
திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்
திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்
அருள் பணியாளர் மக்கள் மீது புனிதப்படுத்தப்பட்ட நீரைத் தெளிக்கின்றார்; அப்போது அனைவரும் பாடுகின்றனர்:
கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன், அல்லேலூயர்
அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா.
நம்பிக்கையாளர் மன்றாட்டு
குரு. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் எமக்கு இது மகிழ்ச்சியே. இயேசுவின் தியாகம் நிறைந்த அவரின் பாடுகள் மரணம் அனைத்துமே அவரின் உயிர்ப்பிலே நிறைவேறுகின்றது. எமக்கு விடுதலை பெற்றுத் தந்த இயேசுவின் பாதத்தில் எமது தேவைகளை ஒப்புக்கொடுப்போம்.
1. திரு அவைக்காக மன்றாடுவோம்
அன்பின் இறைவா, உமது உயிர்ப்பை அகிலம் எங்கும் கொண்டாடும் எமது திரு அவை, உம்மை அதிகம் அன்பு செய்து வாழ்வதாக. இம்மகிழ்ச்சியை பரப்பிடும் வாஞ்சைகொண்ட பணியாளர்கள் அதிகம் உருவாகிடவும், உமது உயிர்ப்பின் மக்களாக, பணியாளர்களாக நாளும் திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று...
2. எம் மக்களுக்காக மன்றாடுவோம்
அன்பின் இறைவா, நீர் உருவாக்கிய இப்பூமியிலே சமாதானம் மலரவும், மகிழ்ச்சி நிலைத்தோங்கவும், உரிமைகள் பாதுகாக்கப்படவும், சிதறுண்ட மக்கள் ஒன்று சேரவும், நடைபெறும் யுத்தம் நிறுத்தப்படவும் மக்கள் எதிர்பார்க்கும் விழுமியங்கள் மனதிலே விதைக்கப்படவும் வரமருளவேண்டுமென்று...
3. ஜுபிலி ஆண்டிற்காக மன்றாடுவோம்
அன்பின் ஆண்டவரே, இறைவேண்டலின் ஆண்டில் பயணிக்கும் நாம், எமது திரு அவையின் சமகால தேவைகளை கருத்தில்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டிய அருளை கேட்டு மன்றாடுகின்றோம். விவேகத்தோடும், பொதுநலத்தோடும், ஒன்றிப்போடும் செயற்படும் திரு அவையாக நாம் மாறவேண்டிய அருளை பொழிந்தருளவேண்டும்மென்று...
4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்
அன்பின் ஆண்டவரே, அன்பை சுயநலனாக்கி, வாழ்வை கசக்கி பிழிந்து பொருளாதார கெடுபிடிகளால் நிலை இழந்து வாழும் எம் மக்கள் தொலைந்திடாமல், தூர விலகிடாமல் தொடுவானமாம் எம் உயிர்ப்பின் இயேசுவுடம் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டுவாழ வாரமருளவேண்டுமென்று...
திருமுழுக்கு இடம்பெற்றால்
5. திரு அவையின் புது உறவுகளுக்காக மன்றாடுவோம்.
அன்பின் ஆண்டவரே, இன்று திருமுழுக்கு எனும் திருவருட்சாதனத்தை பெற்று புதிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள், உலகின் ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. கிறிஸ்துவை அச்சாரமாகக் கொண்டு படைப்பின் நற்செய்தி அறிவிப்பார்களாக. உலகை தம்பால் ஈர்க்கும் உண்மைச் சக்திகளாக திகழவேண்டுமென்று...
குரு. இறைவா, நீர் எமக்கு தந்த விடுதலை வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். சாவை வென்று வாழ்வை தந்தீர். தீமைகள் எமக்குள்ளே அகன்று தூய வாழ்வை நாம் அணிந்துகொள்வோமாக. நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் இத்தேவைகள் எமக்கு தேவையான அருளைப் பெற்றுத் தருவதாக. எங்கள்...
நற்கருணை வழிபாடு
வருகின்றோம் இந்நாளில் நன்றி
காணிக்கை தருகின்றோம் (2)
கரம் பற்றி நடந்திடும் என் தலைவா
என் கிண்ணம் நிரம்பிடச் செய்திடுவாய்
1. உழைப்பினை எடுத்து வந்தோம் உமக்கு அதன்
பலன்தனை அர்ப்பணித்தோம்
மனிதத்தை வளர்த்திடவே நாங்கள் உந்தன்
தியாகத்தை வாழ்ந்திடுவோம்
இறைவா என் இறைவா உன் மலரடி பாதம் பணிந்திடுவோம் -2
குறைகளை நீக்கி ஏற்றிடுவாய்
ஒளிர்ந்திடும் சுடராய் மாற்றிடுவாய்
2. ஏழைகள் உயர்ந்திடவே என்றும் எங்கள்
வாழ்வினைப் பகிர்ந்தளித்தோம்
சமநிலை தோன்றிடவே எங்கும் பாவப்பிரிவினை மீட்டிடுவோம்
உயிரே என் உறவே புது வசந்தம் விரைவில் மலர்ந்திடவே -2
ஏழையின் துயரம் போக்கிடவே
ஏற்றிடு எங்களின் காணிக்கையை
திருவிருந்துப் பல்லவி
1 கொரி 5:7-8 நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு கொண்டாடு வோமாக. அல்லேலூயா.
திருப்பாடல் 117-ஐப் பாடுவது பொருத்தம் ஆகும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும்; இவ்வாறு பாஸ்கா அருளடையாளங்களால் நிறைவு பெற்ற நாங்கள் உமது பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.
சிறப்பு ஆசி
சிலுவையில் அறையுண்ட மெசியா
இறைவல்லமையும் இறைஞானமுமாய் உள்ளார்
இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும் - இந்த
உலகமும் உணர்ந்திடட்டும்
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா -4
1. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் - மன
நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்
நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் - எங்கள்
தேவனே சிலுவையின் பொருள் சொல்வாய்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) அல்லேலூ...
2. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்
உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை
பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே எங்கள்
வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) அல்லேலூ...
தொடர் பாடல்
இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.
பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.
மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாNர்
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.
சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.
வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.
உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.
சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.
கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.
மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.