ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு
- திருப்பலிக்கான திரு உடை: சிகப்பு
- எருசலேமுக்குள் ஆண்டவரின் நுழைவை நினைவுகூர்தல்மு
- தல் வகை: பவனி
- குருவானவர் சிலுவை அடையாளம் வரைந்து வழிபாட்டை தொடங்குவார்.
திருப்பலி முன்னுரை
இயேசு எருசலேம் நுழைகின்றார்; 'தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே, உன்னதங்களிலே ஒசன்னா' என்று கீதம் பாடி அவரை வரவேற்கின்றனர். இயேசு தனது தந்தையின் விருப்பப்படி தனது வாழ்வின் இறுதிக் கட்ட நிகழ்வுகளுக்குள் செகின்றார். இன்று தான் புனித வாரம் ஆரம்பமாகின்றது. இயேசுவின் பாஸ்கா மறை நிகழ்வின் கொண்டாட்டம் ஆரம்பமாகின்றது. எமது வாழ்வும் விண்ணகம் நோக்கிய பயணத்தில் இணைகின்றது. எமது தவ ஒறுத்தல்கள் அர்த்தம் பெறும் அழகான சந்தர்ப்பமாகின்றது. கிறிஸ்துவின் வெற்றி அவரது பாடுகள் மற்றும் மரணத்திலே
பொதிந்து கிடக்கின்றது என்பதை எண்பிக்கின்றார். இயேசுவோடு சேர்ந்து பயணிப்போம். அவரது பாடுகளில், துயரத்தில் பங்கேற்போம். 'ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்;' எனும் இறைவாக்கினர் எசாயாவின் கூற்றை மெய்பிக்க எமக்காக மரிக்க முன்வரும் இயேசுவின் பாதங்கள் பற்றிக்கொண்டு முன்செல்வோம்.
தாவீதின் மகனுக்கு ஓசான்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்ப பெற்றவரே
இஸ்ராயேலின் பேரரசே
உன்னதங்களிலே ஓசான்னா
குருத்தோலைகள் மந்திரித்தல்
மன்றாடுவோமாக.
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இக்குருத்தோலைகளை உமது ஓ ஆசியால் புனிதப்படுத்தியருளும்; அதனால் கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக நிலையான எருசலேமுக்குள் வந்து சேர ஆற்றல் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: ஆமென்.
அல்லது
மன்றாடுவோமாக.
இறைவா, உம்மை எதிர்நோக்கியிருப்போரின் நம்பிக்கையை வளர்த்து உம்மை வேண்டுவோரின் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் வெற்றி வீரரான கிறிஸ்துவின் திருமுன் இன்று குருத்தோலைகளை ஏந்தி வருகின்ற நாங்கள் அவர் வழியாக நற்செயல்களின் பயன்களை உமக்கு அளிப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென். அருள்பணியாளர் அமைதியாகக் குருத்தோலைகள் மீது புனித நீரைத் தெளிக்கின்றார்.
நற்செய்தி இறைவாக்கு: மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 11:1-10
அல்லது யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 12:12-16
பவனி
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக்கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே
மண்ணுலகும் அதில் நிறைந்துளளவையும்
பூவுலகும் அதில்வாழும் யாவும் ஆண்டவருடையது.
ஏனெனில் அவரே அதைக் கடல்கள்மேல் நிறுவினார்
ஆறுகளின் மீது அதை நிலைநாட்டினார். (பல்லவி)
திருப்பலி
- பவனியின் பின், சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலியை ஆரம்பிப்பது, மன்னிப்பு வழிபாடு, மற்றும் மக்கள் மீது ஆசிர் நீர் தெளிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக்கொள்ளவும் செய்தீNர் அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக்கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
1ம் இறைவாக்கு:- எசாயா 50: 4-7
தியானப்பாடல் :- திருப்பாடல் 22
என் இறைவா என் இறைவா
ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
உதட்டை பிதுக்கி தலையசைத்து
எனைப்பார்த்து ஏளனம் செய்கிறனர் – 2
ஆண்டவரில் நம்பிக்கை வைத்தானே
அவரே இவனை விடுவிக்கட்டும் - 2 என்றார்
நாய்களோ பல என்னை சூழ்ந்தனவே
நஞ்சினும் கொடியவர் வளைத்தனரே – 2
கைகளை கால்களை துளைத்தனரே – என்
மெய்யதன் எலும்பெண்ண முடிந்ததுவே – 2
ஆடையை தமக்குள்ளே பகிர்ந்தனரே – என்
உடைமீது சீட்டையும் போட்டனரே
ஆனால் என் ஆண்டவா எனை விட்டு நீர்
தொலைவிலே போகாமல் உதவவாரும் - 2
ஆண்டவர்க்கஞ்சுவொரே அவரை
ஆர்பரித்தே புகழ்ந்தேத்துங்களே
இஸ்ராயேல் மக்களே அவர்க்கஞ்சுங்கள்
யாக்கோபின் மரபே நீ போற்றிடுவாய்
2ம் இறைவாக்கு :- பிலிப்பியர் 2 : 6 – 11
- நற்செய்தி இறைவாக்கின் போது எரியும் திரிகளும் தூபமும் இருக்கக் கூடாது, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் ஆண்டவருடைய பாடுகளின் வரலாறு வாசிக்கப்படும். நற்செய்தியின் இறுதியில் நற்செய்தி நூலை முத்தமிட தேவையில்லை.
நற்செய்தி இறைவாக்கு:- தூய மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பாடுகள்' 14:1 - 15:47
- சுருக்கமான மறையுரை இடம் பெறலாம்.
- நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு
குரு. இயேசு கிறிஸ்துவின் எருசலேம் நோக்கிய பயணத்திலே நாமும் சேர்ந்து பயணிக்கின்றோம். தமது பாடுகளோடு, துன்பங்களோடு, வேதனைகளோடு நாம் ஒப்புக்கொடுக்கும் விண்ணப்பங்களையும் தாங்கிச் செல்வார் எனும் நம்பிக்கையுடன் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. திரு அவையை வழிநடத்தும் இறைவா,
தனது புனிதப்படுத்தும் பணியினால் உலகை இறைவன்பால் கொண்டுவர உழைக்கும் எமது திருநிலைப் பணியாளர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். இவர்கள் சந்திக்கும் அனைத்து சவால்களையும் முகங்கொடுக்கும் வீரத்தையும், மக்களை தமது முன்மாதிரிகையால் வழிநடத்தும் ஆற்றலையும் அளித்தருள வேண்டுமென்று ...
2. வரங்களை நிறைவாய் பொழியும் இறைவா,
கிறிஸ்துவின் பாடுகளை, மரணத்தை தியானிக்கும் நாம் அவரின் விருப்பத்தை எமது வாழ்விலே நிறைவேற்ற முன்வருவோமாக. இதனால் எமது ஆன்மிக வாழ்வில் சந்திக்கும் அனைத்து சவால்களிலும் அவரையே பிரதிபலிக்க அருள்புரிய வேண்டுமேன்று ...
3. சுமைகளை தாங்கும் இறைவா,
இவ்வுலகை வாட்டி வதைக்கும் துன்பங்களும் துயரங்களும், வேதனைகளும் சோதனைகளும், நோய்களும் இறப்புக்களும் எம்மை விட்டு நீங்கவும், மக்களும் தமது வாழ்வின் தேர்வுகளின் போது நேர்மையுடனும், உண்மையுடனும் உழைத்துப் போராடும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ...
4. அன்பைப் பொழியும் இறைவா,
சிலுவை அன்பை இன்று நீர் எமக்கு காட்டியிருக்கின்றீர். இவ்வன்பினால் பிறரை ஏற்றுக்கொள்ளவும், தாழ்ச்சியோடு வாழவும், இரக்கம் காட்டவும், பகிர்ந்து கொடுக்கவும், ஆணவத்தை விட்டொழிக்கவும் எமக்கு கற்றுத்தருகின்றீர். நாமும் இச்சிலுவை அன்பை ஏற்றுக்கொண்டு உம்மையே நாளும் வாழும் வரமருள வேண்டுமென்று ...
குரு: இறைவா, நீர் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு எமக்காக உமது உயிரையே உவந்தளித்தீரே. இச்சிலுவை தரும் பாடங்களை நாம் கருத்தாய் கடைப்பிடிக்க எமக்கு உதவியருளும். இன்று நாம் உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் எமது விண்ணப்பங்களை ஏற்றருளும். தாழ்ச்சியோடு நாம் அளிக்கும் இவ்வேண்டல்கள் வழியாக எமது வாழ்வும் ஆசிர்வதிக்கப்படுவதாக. இவற்றை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைப் பாடல்
தந்தாய் நாங்கள் வந்தோம்
உம் பாதம் காணிக்கை தந்தோம் -2
ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் வாழ்வுகள் மலர அருள்புரிவீர் -2
1. கல்வாரி மலைமீது சிலுவை நம் பாவப்பரிகார முழுமை
எவ்வாறு சுமப்போம் பளுவை என்பவன் சுயநலத்தின் அடிமை
ஓ இயேசுவே எம் அன்பினை காணிக்கையாகத் தந்தோம்
ஓ தேவனே எம் வாழ்வினை அர்ப்பணம் செய்திட வந்தோம் -2
2. ஏழ்மையில் வாழ்ந்திடும் சிலுவை ஏளனப் பொருளாகும் நிலைமை
எவ்வாறு மாற்றுவது இதனை என்பதே வாழ்க்கையின் கடமை
ஓ இயேசுவே பணிவாழ்வினைக் காணிக்கையாகத் தந்தோம்
ஓ தேவனே உம் தோள்களின் சிலுவையைச் சுமந்திட வந்தோம்
அர்ப்பணம் செய்திட வந்தோம்
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக் எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக. எங்கள்.
நற்கருணைப் பாடல்
கருணை தெய்வமே கனிவாய் என்னில் வா
வானின் அமுதமே வாழ்வில் கலந்து வா
உந்தன் விருந்திலே உள்ளம் மகிழுதே
உணவாய் எழுந்து வா
1. அன்பே உன் வரவின்றி அருளே உன் துணையின்றி
இருளில் நான் தள்ளாடுவேன்
உயிரே உன் உறவின்றி உலகில் உன் நிழலின்றி
துயரில் நான் கண்மூடுவேன் (2)
உயிரூட்டும் உணவாக வா வழிகாட்டும் விளக்காக வா
ஆன்மாவின் ஆனந்தமே ஆறாகும் பேரின்பமே
2. ஊர் தூங்கும் வேளை ஒளிதூவும் நிலவாய்
என் வாழ்வின் ஒளியாகினாய்
வழி பார்த்து கண்கள் நீர் கோர்த்து நிற்க
என் பாதை வழியாகினாய் (2)
என் தேவன் நீ இல்லையேல் என் உள்ளம் தடுமாறுமே
உன் பாதை நான் இல்லையேல் என் வாழ்வு வீணாகுமே
திருவிருந்துப் பல்லவி மத் 26:42
தந்தையே, நான் குடித்தால் அன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படி ஆகட்டும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக. எங்கள்.
மக்கள்மீது மன்றாட்டு ஆண்டவரே,
உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
இறுதிப் பாடல்
தயை செய்வாய் நாதா
என் பாவங்களை நீக்கி - 2
அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வைய்யும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமையா
பாவமதை நீக்கி என்னை பனிபோலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னை தூய்மையாக்கும்
என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மழைபோல்
தீவினையில் மறவாது என் மனது என்றும் - உம்
புனிதத்தை போக்கி நான் பாவியானேன் - நீர்
தீமை என்று கருதுவதை துணிந்து செய்தேன்
உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர் - ஏன்
ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவை ஊட்டும்
என்பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்
பனி வென்மைக்கு உயர்வாக புனிதமாவேன்
No comments:
Post a Comment