Saturday, 24 February 2024

தவக்காலம் -இரண்டாம் ஞாயிறு - 25-02-2024

 


முன்னுரை

புலர்ந்திடும் இப்புதிய காலைப் பொழுதினில் இறை பலிசெலுத்தவும், இறை உறவை வளர்க்கவும் கூடி வந்திருக்கும் என் அன்பு உள்ளங்களே! இயேசுவின் பெயரால் உங்களை நாம் வரவேற்கின்றோம். இன்று திரு அவை தாயானவள் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்க அழைக்கின்றாள். 

தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறு வாரம் மிகவும் பெறுமதியான ஒரு செய்தியை எமக்கு தருகின்றது. சோதனைகள், துன்பங்கள், கண்ணீர் மேலும் போராட்டங்கள் அனைத்தின் வழியாக இறைவனில் வைத்திருக்கும் நம்பிக்கை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை முதல் இறைவார்த்தை வலியுறுத்துகின்றது. ஈசாக்கைப் பலியிட துணிந்த ஆபிரகாமின் இறை விசுவாசம் வியக்கத்தக்கதே. எமக்கென்று நாம் சேர்த்துவைத்திருக்கும் அனைத்தையும் இழக்க துணிவது, தெளிவான ஆன்மிகப் பயணத்திற்கான முதல் படியாகும். இன்றைய நற்செய்தி இறைவார்த்தையிலே இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் நோக்கம் தெளிவுபடுத்தப்படுகின்றது. 

பாடுகளும் மரணமும் இயேசுவுக்கு முன்பேயுள்ள சவால்களாகும். ஆனால், இதை விளங்க மறுத்தது அப்போஸ்தலர்களின் வாழ்வும், அவர்களின் தேவையுமே. இன்றைய நாளுக்குரிய எமது அழைப்பும் இதுவாகவே அமைகின்றது. எமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இத்தவக்காலம் ஒரு தெளிவான பயணம், பாவத்திற்கு விலை போகாது, இயேசுவின் இரத்தத்தால் எம்மை முழுமையாகக் கழுவி தூய்மையாக்கும் பரிகாரப் பயணம். பிறரையும் எம்மைப் போல் ஏற்றுக்கொண்டு, அன்பு செய்து, மன்னித்து வாழ அழைக்கும் கல்வாரிப்பயணம். எமக்கு முன்னுள்ள அனைத்து குப்பைகளையும் அகற்றிவிட்டு, தூய மனதோடு இயேசுவின் சிலுவை வழி செல்லும் தியாகப் பயணம். இப்பயணத்திலே ஆபிரகாமைப் போல நிறை விசுவாசம்கொண்டு பயணிக்கவும், இயேசுவைப் போல, வாழ்வின் நோக்கம் தவறாமல் சிலுவை நோக்கிப் பயணிக்கவும் வரம் வேண்டி இப்பலியிலே இணைந்திடுவோம். 


வருகைப் பல்லவி            காண். திபா 28:8-9

என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது பார்க்க விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்; அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.

அல்லது         காண். திபா 24: 6,2,22

ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினை ந்தருளும்; எ ங் கள் பகைவர்கள் எ ங் களை ஒரு-போதும் அடக்கி ஆளவிடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக் கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத் திருவுளம் கொண்டீNர் அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு.


1ம் இறைவாக்கு

தொடக்க நூல்: 22: 1-2, 9-13, 15-18

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி

பதிலுரைப் பாடல்                     திபா 116

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

2ம் இறைவாக்கு  

உரோமையர்: 8: 31டி-34

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி           மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது:'என் அன்பார்ந்த மைந்தர் இவNர் 

இவருக்குச் செவிசாயுங்கள்.'

நற்செய்தி இறைவாக்கு

மாற்கு: 9: 2-10 என் அன்பார்ந்த மைந்தர் இவரே.


விசுவாகிகள் மன்றாட்டு

குரு: இயேசு தனது பாடுகள் மரணம் நோக்கிப் பயணித்தார். அப்பயணத்திலே எந்தத் தடைகள் வரினும், அதை துணிந்து சென்று முறியடித்தார். அவரிலே எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: நவின உலகிலே பயணிக்கும் எமது திரு அவை சந்திக்கும் சாவாலான நுகர்வுக் கலாசாரத்திற்குள்ளே அகப்பட்டுவிடாமல், அறிவும், ஞானமும் மட்டுமல்ல அதனோடு கூடிய ஆன்மிக அனுபவமும், விவேகமும் திரு நிலையினரின் வாழ்வின் அணிகலன்களாக இருக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...

2. எமக்காக மன்றாடுவோம்: கூட்டொருங்கியக்கத் திரு அவையாக பயணிக்கும் எமக்கு, 2025ம் ஆண்டை ஜுபிலியின் ஆண்டாகக் கொண்டாட எம்மை ஆயத்தம்செய்வோம். தூய ஆவியின் வழிநடத்தலில் திருக் குடும்ப உணர்வோடு, புதிய வழிகாட்டலில், புதிய நெறிப்படுத்தலில், புதிய சமுகமாக பயணிக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...

3. எமது பங்கின் பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்: சத்தங்கள் நிறைந்த வேகமான உலகிலே, பொய்யான போக்கிலே சேர்ந்து பயணிக்கும் இக்காலத்திலே, குடும்ப உருவாக்கம் பெற்று மிளிரும் நல்ல தலைமுறை உருவாகவும், தமது வாழ்க்கையிலே எது சரி, எது பிழை என்பதை தெளிவாகக் கண்டுணரும் பாக்கியம் பெற அருள்புரிய வேண்டுமென்று,... 

4. தவ, ஒறுத்தல் முயற்சிகளாலும் செபத்தாலும் தம்மை இறைவனுடன் ஒன்றினைத்து வாழும் அனைவருக்காகாவும் மன்றாடுவோம். இவர்கள் தமது அர்ப்பணத்தால் இவ்வுலகிற்காக வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா! இத்தவக்காலத்திலே உமது பாடுகளோடு சேர்ந்து பயணிக்கும் எம்மை ஆசீர்வதித்தருளும். உமது பிள்ளைகளாகிய நாம் உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் எமது உள்ளத்தின் காணிக்கைகளை ஏற்று, அதற்குச் செவிசாய்த்தருளும். இவ்விண்ணப்பங்கள் வழியாக நாம் என்றும் உமது வாழ்வோடு ஒன்றித்திருக்க அருள் செய்தருளும். எங்கள் ஆண்டவாராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை வேண்டு-கின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக. எங்கள்;.

திருவிருந்துப் பல்லவி             மத் 17:5

என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில் பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்;.

மக்கள்மீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரை முடிவில்லா ஆசியால் புனிதப்படுத்தி உம் ஒரே திருமகனின் நற்செய்தியைக் கடைப்பிடிக்கச் செய்தருளும்; அதனால் அவர் தம் திருத்தூதர்களுக்குத் தம்மில் வெளிப்படுத்திய அந்த மாட்சிமீது அவர்கள் என்றும் ஆர்வம் கொள்ளவும் அதை மகிழ்வோடு வந்தடையவும் தகுதி பெறுவார்களாக, எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...